பரீட்சை எப்படி இருந்துச்சு பாப்பா..?
அம்மா... ரொம்ப கஷ்டம்மா..
ஏன்டா..? நல்லா தான படிச்சிட்டு போனீங்க.
அம்மா.. அதெல்லாம் நம்ம படிக்காதது. படிக்கவே தெரியாது இல்ல.. பெரிய பெரிய கேள்வியா இருந்துச்சு. படிக்கவே முடியல.
ஆமா... அதுக்கு தான் நல்லா படிக்க தெரிஞ்சுக்கணும். நிறைய படிச்சு பழகணும்ன்னு சொல்றது.
மேம் படிச்சு காமிக்கலயா.. ?
இல்லம்மா... வேற மேம் வந்தாங்க. எதுவும் படிக்கல. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாங்க. அவ்ளோதான்.
சரி, நீ எல்லா கேள்விக்கும் பதில் குறிச்சியா இல்லையா ?
அதான் கேள்வியே படிக்க தெரிலயேம்மா.. எப்படி பதில் எழுதறது?
ஏன் பாப்பா.. ? அப்போ எல்லா கேள்விக்கும் பதில் எழுதலயா?
கேள்வி தெரிலனா என்ன? பதில் சின்னதாதான இருக்கும். அத படிச்சி பாத்து பதில் எதுவா இருக்கும்ன்னு போட்டு இருக்கலாம்-ல..
அம்மா..! என்னம்மா நீ.. !
கேள்வி தெரியாமா பதில் மட்டும் எப்படிம்மா எழுத முடியும்.
முதல்ல கேள்வி படிக்க தெரிஞ்சா தான பதில் எதுன்னு தெரியும்.
அவ்வ்வ்வ் ...!
அச்சோ... ! என் செல்லகுட்டி. எவ்ளோ அழகா சொல்லுது. ஆமான்டா செல்லம் கேள்வி தெரிஞ்சா தான் பதில் எழுத முடியும். நம்ம சீக்கிரமா இன்னும் நல்ல படிக்க கத்துக்கலாம்.
குழந்தைங்க கிட்ட குறுக்கு வழிய நம்மளே சொல்ற மாதிரி ஆயிடுச்ச்சேச்சேன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ஆனா அவங்களோட அழகிய மனசு இருக்கே... !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக