வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

அழகு

  


சின்ன சின்ன விஷயங்களையும் வெவ்வேறு விதமாக பார்க்கும் கலையை குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆச்சரியங்களும் அற்புதம் என்று பாராட்டவும், எப்படி இப்படியெல்லாம் யோசித்தீர்கள்? என்று கேட்டு மகிழ்ச்சி கொள்ளவும் வைக்கிறார்கள்.


அவர்களின் உலகத்தை தூர நின்று பார்த்து ரசிப்பதில் திகட்டாத ஆனந்தம்.


பிறந்தநாள் முடிந்து பத்து நாட்கள் ஆன பிறகும் அலங்காரம் செய்த சுவர் அப்படியே இருக்க, ஒவ்வொரு பலூனாக காலியாகி கொண்டே இருந்தது. அந்த இடத்தில் இருந்த இரு பக்க சுவரொட்டியில் அவர்களின் பொம்மைகளை ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


 "அம்மா..  இங்க பாரு...! "என்று சொன்னதும், 

எல்லா சூப்பர்மேன்களும் நிஜமாக உருவெடுத்தது போல இருந்தது. 


அவர்கள் செய்யும் செயல் ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அற்புதமும் அடங்கி இருக்கும். ஒவ்வொரு நாளும் அவர்களின் உலகம் குறித்து ஒரு துள்ளல் ஏற்படுவது ஏன்? நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்? ஆச்சரியம் கொள்ளாமல் மகிழாமல் யாருடனும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.


குழந்தைகளாக இருக்கும் போதும் குழந்தைகளோடு இருக்கும் வரையும் 




எல்லாம் அழகாகாவும், இன்பமாகவும் அற்புதமாகவும் தெரிகிறது.