உன் ஆர்ப்பரிக்கும் அலைகளில் துவண்டு போன என் மனதை
முழுதாய் தழுவ வந்து தழுவாமல் போகிறாய் !
துள்ளி துள்ளி எனை அணைக்க வந்து
லேசாய் வருடி மட்டும் செல்கிறாய் !
காலை சூரிய ஒளியில் ஜொலிக்கும் உன் அழகை பார்த்து ரசிக்கும் என்னை
தொட்டு தொட்டு உன் அன்பை சொல்லாமல் சொல்லி செல்கிறாய் !
மெதுவாய் வந்து வந்து சென்றவள் சட்டென்று குதூகலமாய்
ஓடி வந்து கட்டிக் கொள்கிறாய் !
வெகு நேரமாய் ஏதோ நினைவில் மூழ்கி போன என்னை எழுப்ப விரும்பாமல்
பட்டும் படாமல் கண்டும் காணாமல் விலகி செல்கிறாய் !
என் மன அலைகளை எல்லாம் உன் அலைகளில் விட்டு செல்ல வந்த எனை
துளியும் தயங்காமல் அள்ளி அரவணைத்து கொள்கிறாய் !
உன் அன்பின் ஆழத்தை வியந்து பார்க்கிறேன்
நீ என்னோடு கொண்ட உறவு
என்றும் என் மனதிற்கு நெருங்கிய
என் தோழியை போல !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக